தமிழக காங்கிரஸ்: மக்கள் அரசியலா அல்லது பிம்ப அரசியலா?
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்ட காங்கிரஸ் பேரியக்கம், இன்று தமிழக மக்களின் உண்மையான தேவைகளையும், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் பேசத் தவறிவிட்டதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 15 ஆண்டு காலச் செயல்பாடுகளை உற்றுநோக்கினால், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவோ, சமூக நீதிக்காகவோ அல்லது மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கோ அக்கட்சி ஆக்கபூர்வமான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய நிதர்சனம். மக்களின் வாழ்வியல் தரம் உயர்வதற்கான திட்டங்களையோ, இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் கல்வி […]





