உயிர் சூழல் காக்க பசுமை புரட்சி பயணம்
திருச்சி மறைமாவட்ட துறவியர் பேரவை முன்னெடுத்த இயற்கையை பாதுகாக்கும் மற்றும் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “பசுமைப் பயணம்” மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிறப்பாக தொடங்கி நடத்தப்பட்டது. முன்னதாக துறவியர் பேரவை (TNCRI) மற்றும் AICUF குழுவினர் மேற்கொண்ட பசுமைப் பயணம் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, 20ஆம் தேதி சென்னையில் நிறைவு பெற உள்ளது. (11.11.2025) அந்த பயணக் குழுவினர் நாகமங்கலம் இறையிறக்க ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். […]





