“பெரியாரின் கோட்பாடு – இன்றைய இளைஞர்களின் நிலைப்பாடு”
இன்றைய இளைஞர்கள் சிந்தனையிலும் ஆற்றலிலும் மிகுந்த தீப்பொறிகள். ஆனால் அந்த ஆற்றல் எந்த திசையில் பாய வேண்டும், எதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் சொல்லி வழிகாட்டும் நபர்கள் இன்றைய காலகட்டத்தில் உண்மையில் இருக்கிறார்களா என்று சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் 1929ஆம் ஆண்டு தனது 50வது வயதில் பெயரில் இருந்த “நாயக்கர்” என்ற சாதிப் பட்டத்தை நீக்கியது — உண்மையான மாற்றம் எவ்வளவு ஆழமான சுயபரிசோதனைக்குப் பிறகே நிகழும் என்பதை உணர்த்துகிறது.
பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஒரு வலிமையான சிந்தனை முழுமையாக உருப்பெற நீண்ட காலம் ஆகலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கால தாமதத்திற்கான காரணம்: பெரியார் வாழ்ந்த காலத்தில், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும், சமூக சீர்திருத்தங்களுக்கும் எந்த ஒரு முன்மாதிரியும், பரவலாக்கப்பட்ட ஊடகங்களும் இருக்கவில்லை.
அவர் தனது சொந்த அனுபவங்கள், துறவு வாழ்க்கை, காசிப் பயணம், மற்றும் பலருடன் ஏற்பட்ட விவாதங்கள் மூலமாகவே தன் சிந்தனையை முழுமைப்படுத்தினார்.
இதற்கு 50 வருடங்கள் ஆனது ஆச்சரியமில்லை.
இன்றைய இளைஞர்கள் உடனடியாக பகுத்தறிவாளர்களாகவோ, புரட்சியாளர்களாகவோ மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பானதே. ஆனால், தகவல் வெள்ளம் பெருகியிருந்தாலும், அந்தத் தகவல்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க, ஒருவருக்கு நேரமும் அனுபவமும் அவசியம்.
முந்தைய தலைமுறையினர் தங்கள் வாழ்வை எவ்வாறு கட்டமைத்தனர்? பெரியாரின் சிந்தனைக்கோட்பாடுகளும் சமூகநீதிக்கான நோக்கங்களும் இன்று அவர்களிடத்தில் உயிருடன் உள்ளதா என்ற கேள்விக்குறி நிலைத்திருக்கிறது. அப்படியிருக்க, இன்றைய இளைஞர்களையே குறை கூறுவது நியாயமல்ல.
பிறரைக் குறை சொல்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தினரின் (பிள்ளைகள், பேரன் பேத்திகள்) நிலைப்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
விமர்சனத்திற்கு முன் சுயபரிசோதனை அவசியம். சமூகத்தை விமர்சிக்கத் தார்மீக உரிமை, சுய பக்குவத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
திராவிட இயக்கக் கொள்கைகளைத் தாங்கிப் பிடிக்கும் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள், பெரியார் வலியுறுத்திய சாதி மறுப்பு, மத ஒழிப்பு, பகுத்தறிவு ஆகியவற்றைத் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் செயல்பாடுகளிலும் முழுமையாகப் பின்பற்றுகிறார்களா?
பல சந்தர்ப்பங்களில், அரசியல் லாபங்களுக்காகக் கொள்கைகள் நீர்த்துப்போகும் அல்லது முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
அடிமைத்தனமான போஸ்டர்கள்: தலைவர்களை “கடவுளாக” அல்லது “வாழ்க்கைக்கு ஆதாராமாக” (“நீங்கள் பிறந்ததால் தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம்”) சித்தரிக்கும் வசனங்கள்,
பெரியார் இதை ஆளுமை வழிபாடு (Cult of Personality) மற்றும் மூடநம்பிக்கைகளின் வடிவம் தான் என்று கடுமையாக எதிர்த்தார்.
பகுத்தறிவைப் பேசும் கட்சிகளுக்குள் இத்தகைய போக்குகள் இருப்பது முரண்பாடானதும், நகைப்புக்குரியதும் ஆகும்.
பொதுவெளியில் பகுத்தறிவு பேசுபவர்கள் பலர், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் சாதியப் பிடிப்புகளுடனும், சடங்குகளுடனும் வாழ்வது ஒரு கசப்பான உண்மை.
அவர்கள் தங்கள் இல்லங்களிலும், வாரிசுகளிடமும் பெரியாரின் கொள்கைகளைச் செயல்படுத்தத் தவறி, பொதுவெளியில் பேசுவது சமூகத்தில் ஒரு பெரும் கேலிக்கூத்தாகவே பார்க்கப்படுகிறது.
“மாற்றம் நம்மிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்… நேர்மறை எண்ணத்தோடு நேர்மறை பார்வையோடு நடுநிலையோடு அரசியலோ உறவுகளோ அணுகும் போது தான் இத்தகைய மாற்றம் ஏற்படும்”
இது ஒரு தொடக்க நிலைதான். பெரியாருக்கே பக்குவம் வர 50 வருடங்கள் ஆனது என்றால், இன்றைய இளைஞர்களும் அனுபவத்தின் மூலம் மட்டுமே முதிர்ச்சி அடைவார்கள். அவர்களை முழுவதுமாக நிராகரிப்பது, நாம் அடைய வேண்டிய மாற்றத்தின் வேகத்தைக் குறைக்கும்.
மாற்றம் என்பது காலப் போக்கு: மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது. அது காலப்போக்கில் நிகழும்.
பெரியாரின் கோட்பாடுகள் காலத்தால் அழியாதவை என்றாலும், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறும் பலரும் (அரசியல்வாதிகள் உட்பட) அவற்றைத் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிப்பதில் நடைமுறை வாழ்வில் சாத்தியப்படுத்த வேண்டும்




