புதிய அரசு கல்லூரிகள் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 26-ந்தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2025-26 கல்வியாண்டில் இந்த புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு அதிகரிக்கிறது.
அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை
தகுதிகாண் பருவத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது 28.4.2025 அன்று முடிவடையாதவர்களுக்கு பொருந்தும்.
மாவட்டங்களில் கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.