“கொடூர மனங்களும் மரித்துப் போகும் தெய்வங்களும்…”
மனித இனம் முழுவதும் ஒரு குழந்தையின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஞானிகளும், அரிய பெருமக்களும், அனைத்து மதங்களும் நமக்குச் சொல்லும் ஆழமான சித்தாந்தம். ஏன் அந்தப் பிஞ்சு மனதைக் கொண்டாடுகிறார்கள்? ஒரு குழந்தையின் மனம் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஓர் அழகு தெய்வம். தன்னைச் சுற்றி நடப்பவற்றை ஆச்சரியத்தோடும், மாசற்ற ஆர்வத்தோடும் பார்க்கும் அந்தச் சிறு உள்ளத்தில் வஞ்சகத்தின் சிறு கீறலோ, தவறான சிந்தனையோ துளிகூட இருக்காது.அதனால்தான் குழந்தைகளை ‘மாசில்லா தெய்வங்கள்’ என்று கொண்டாடுகிறோம். குழந்தை […]




