நிஜங்கள்

ஸ்டான் சுவாமி – சிலையின் உள்ளே மறைந்த சதி நாடகம்

மக்கள் நலனுக்காக வாழ்ந்த ஒரு ஆழமான உள்ளத்துடன் செயல்பட்ட மனிதர் ஸ்டான் சுவாமியின் நினைவு தினம் ஜூலை 5… அவரது வாழ்வும், சமூக நீதி பற்றிய உறுதியும், பழங்குடி மக்களின் உரிமைக்காகத் தூண்டிய அவரின் போராட்டங்களும் இந்திய சமூக சிந்தனையில் இன்னும் புதையல் போல் உள்ளது. ஆனால் இன்று, அவரின் பெயர் சிலை Politics-ல் சிக்கி, பல கேள்விகளை எழுப்பும் நிலையில் இருக்கிறது என்பது வருத்தமான உண்மை.

ஸ்டான் சுவாமி – ஒரு இயேசு சபைக் குரு, ஆன்மீக பணியைத் தாண்டி, சமூக உணர்வுடன் செயல்பட்டவர். ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமை, நில உரிமை, வள பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் தன்னலமின்றி செயலாற்றியவர். அவரது இறுதிக் காலங்களில் ஜார்க்கண்டில் பழங்குடி மக்களுக்காக பாடுபட்டார். அந்தப் பாடு ஒரு அரசியல் சிறையில் முடிவடைந்தது. சிறையில் மரியாதையற்ற சூழ்நிலையில் சிகிச்சை மறுக்கப்பட்டதால், அவர் உயிரிழந்தார்.

இத்தகைய ஒரு மனிதருக்கு நினைவுச் சிலை நிறுவப்படுவதில் சந்தோஷம் இருக்கவேண்டும். ஆனால் தற்போது உருவாகும் சூழ்நிலை, அந்தச் சிலையின் பின்னணியில் உள்ள நோக்கங்களை பற்றி சிந்திக்க வைக்கிறது.

“Stan Swamy People of Federation – Viragalur” என்ற பெயரில் ஒரு அமைப்பு, அவரது பிறந்த ஊரில், ஆலய வளாகத்துக்குள் சிலை அமைக்க முனைந்துள்ளது. இச்செயலுக்கு ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வ அனுமதி என்பது கேள்விக்குறி. மேலும், இந்த அமைப்பின் சட்டபூர்வ நிலை, அதன் உறுப்பினர்கள் யார் என்பதுபற்றிய தெளிவும் இல்லை.

இத்தகைய முக்கியமான நினைவு நிகழ்வுகளை கத்தோலிக்க திருச்சபை, இயேசு சபை போன்ற ஆன்மீக அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் நடத்தாமல், வெளிச்சத்திற்குத் தெரியாத அமைப்புகள் கையில் எடுத்துக்கொள்வது, மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குவதில்லை. கடந்த ஆண்டுகளில் ஸ்டான் சுவாமியின் சிலை அமைப்பதில் வந்த அரசியல் எதிர்ப்புகளும், சட்ட விவாதங்களும், தற்போதைய நிகழ்வுகளுக்கும் இடையில் காணப்படும் எதிரெதிரான அணுகுமுறைகள், இது வெறும் சமூகப் பணியல்ல — இதில் அரசியல் நிழல்கள் செயலில் உள்ளன எனத் தெளிவாகக் காட்டுகிறது.

அதிலும், தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த நினைவுச் சிலை ஆர்வம் ஏற்படுவது, அரசியல் பிம்பங்களை நிலைநிறுத்தும் முயற்சியாகவும், மக்கள் உணர்வுகளைத் திசைதிருப்பும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. ஸ்டான் சுவாமியின் பெயரை அரசியல் சிந்தனைகளின் வணிக சாதனமாக்குவது, அவருடைய வாழ்க்கை முறைக்கும் பணிக்கும் நேரடி அவமதிப்பாக அமைகிறது.


சில முக்கியமான கிறிஸ்தவர்கள் கடுமையான, கேள்விகளை எழுப்புகின்றனர்

  • ஒரு கத்தோலிக்க குருவாக இருந்த ஸ்டான் சுவாமியின் நினைவுச் சிலை, ஏன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் முன்னெடுப்பாக நடக்கவில்லை?
  • ஏன் இயேசு சபை துறவினர்களின் வழிகாட்டுதலின்றி, சமூகத்தில் சரியாக அறியப்படாத ஒரு அமைப்பு இந்த செயலை கையில் எடுக்கிறது?
  • கடந்த வருடம் சமூகச் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் தனது சொந்த இடத்தில் ஸ்டான் சுவாமி சிலையை நிறுவ முயன்றபோது, தமிழக அரசு (திமுக அரசு) ஸ்டான் சுவாமி ஒரு மாவோயிஸ்ட் தீவிரவாதி என்றும், அவரது சிலையை நிறுவ தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றம் தனிப்பட்ட இடத்தில் சிலை வைக்கத் தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. அப்போதெல்லாம் இந்த அமைப்பு எங்கே இருந்தது?
  • இந்த அமைப்பின் உறுப்பினர்கள் யார்? அவர்களின் முகங்கள் ஏன் பொதுவெளியில் தெரியவில்லை?
  • அரசியல் உள்நோக்கத்துடன் மக்கள் மனங்களை மாற்றும் முயற்சியாகவே இதை பார்க்க முடியுமா?

“உண்மை குரலை சிலையாய் புதைத்து, இழிகுரலை மேடையாக்கும் முயற்சி!”


குறிப்பாக, இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மறு பெயர்களில் தோன்றி, மக்கள் உணர்வுகளை பயன்படுத்து முடித்து மறையும் போக்கை பார்க்க முடிகிறது.

இது வழக்கமான நினைவுச் சிலை நிறுவல் அல்ல. இது, அரசின் நிழல் ஆதரவுடன், கிறிஸ்தவ மக்களை மடைமாற்றவும், அவர்களின் உணர்வுகளை அரசியல் வாக்குகளாக மாற்றவும் உருவாக்கப்படும் சூழ்ச்சியாக இருப்பதற்கான அறிகுறிகளை கொண்டிருக்கிறது. இது ஒரு வகையான இரட்டை வேட அரசியல். வெளியில் ஸ்டான் சுவாமி நினைவென்று சொல்லி, உள்ளிருந்து கிறிஸ்தவ சமூகத்தின் ஒருமித்த விழிப்புணர்வை சிதைக்கும் செயல்.

“புனிதத்தின் மீது போலித்தனத்தின் ஓவியம்”


கத்தோலிக்க ஆயர் பேரவையின் அடையாளமற்ற மௌனம் கேள்விக்குரியது. ஏன் இந்த செயல்பாட்டை அனுமதிக்கிறது? ஏன் இந்த தவறான நடவடிக்கையை தடுப்பதற்கான விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த போலி அரசியல் நாடகங்களை எதிர்த்து, வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

“அழகிய நினைவின் மேலே அரசியல் பூச்சு தடவி, யார் விழிக்கிறார்கள்?”

“அவர் பெயரை வைத்து ஓட்டு விலைக்கு பேசாதீர்கள்; அவர் பெயரை வைத்து யாரும் தங்களின் உருவங்களை காட்சிப்படுத்தாதீர்கள்” என்கிறார்கள்.

இந்த அரசியல் மனோநிலையில், ஸ்டான் சுவாமி போன்ற ஒரு சமூக வீரனின் பெயரை அரசியல் பஞ்சாயத்துக்குள் இழுத்து வருவது, அவருக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி.

ஸ்டான் சுவாமியின் நினைவை, உண்மையான சமூக உணர்வுடன் கொண்டாட வேண்டும்.

கத்தோலிக்க திருச்சபை, மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் இயேசு சபை துறவினர், தாங்களாகவே முன்னெடுப்புகளை எடுத்து, அவருடைய பணியை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

போலி அமைப்புகளின் முகங்கள் வெளிவர வேண்டும்.

“உண்மை குரலை சிலையாய் புதைத்து, இழிகுரலை மேடையாக்கும் முயற்சி!”

அவர்கள் பின்வட்டத்தில் உள்ள நிழல் ஆதரவு யார் என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால் ஆயர் பேரவையும், கிறிஸ்தவ சமூகமும் இந்த தவறான முயற்சிக்கு ஏமாறக்கூடாது.

இது ஸ்டான் சுவாமியின் நினைவுக்கு செய்யப்படும் அரசியல் சூறாவளி. அதன் மையத்திலிருக்கும் பொய்கள், வண்ணமில்லாத முகங்கள், பரிசுத்தம் மிக்க நம்பிக்கையை சேதப்படுத்தும் முயற்சி.

கிறிஸ்தவ மக்கள் ஒரே குரலில் கூறுகிறார்கள்: “அவரை நினைவுகூர நாங்கள் தயாராக இருக்கிறோம் — ஆனால் அவரை வைத்து நீங்கள் அரசியல் நாடகம் செய்யக் கூடாது!”

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

நிழல் to நிஜம் நிஜங்கள்

சக்தியின் ஓட்டம்: உடலுறவின் உளவியல் மற்றும் ஆன்மீக பரிமாணம்

  • June 1, 2025
மனித இனத்தில் ஆற்றலின் உச்சத்தை அடையும் ஒரு செயல் உண்டு. அது – உடலுறவு. இதன் மூலம் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரின் பரிணாமவளத்தில் ஒரு பரபரப்பான ஆழம்
நிஜங்கள்

நம்ம நாய்க்கும் கொரோனா வருமா?– உண்மையா இது

  • June 2, 2025
அவர் வீட்டு நாய்க்கு கொரோனா வந்திருக்கிறதாம்!” என்ற வதந்தி ஒரு பகுதியில் பரவியது. அதைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் தலையாட்டினார்கள். ஆனால் சிலர் பயத்துடன் தங்கள்
Translate »