முன்னேற்றும் கதைகள்

சொல் நயம்

ஒரு வெற்றியாளராக இருப்பதற்கு, நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளை வெற்றிக் கொள்வதற்கு நீங்கள் கற்பனைத் திறன்மிக்க வழிகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் படைப்புத் திறனை கொண்டு இருக்க வேண்டும். லெஸ் பிரவுண் கதை ஒன்றை சொல்வது உண்டு. எப்போதுமே பரபரப்பாக இயங்கும் அதிகாரி ஒருவர், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வேகமாக சென்று கொண்டு இருந்தார். அவர் அலுவலகத்தை விட்டு புறப்படும்போது, ஷூ பாலிஷ் போடும் ஒருவர் அவலர் அணுகி, “உங்கள் காலணிகள் அழுக்காக இருக்கின்றன. நான் சுத்தம் செய்து தரட்டுமா?” என்று கேட்டார். விரைவாக சென்று கொண்டு இருந்த அந்த அதிகாரி சொன்னார், “வேண்டாம்… எனக்கு நேரம் இல்லை”. அந்த பகுதியில் ஒவ்வொரு கட்டடத்திற்கு முன்னாலும் காலணிக்கு பாலின் போடும் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். செயல் அதிகாரி. வரிசையாக ஆறு கட்டடங்களை கடந்து செல்லும் போது, ஆர நபர்களால் இவ்வாறு காலணிக்கு மெருகூட்டித் தரட்டுமா
என்று கேட்கப்பட்டார். அவர்கள் எல்லோரிடத்திலும் செயல்
அதிகாரி ஒரே பதிலாக “வேண்டாம். காலணிக்கு மெருகூட்டிக் கொள்ள எனக்கு நேரம் இல்லை.” என்று பதில் அளித்துக் கொண்டே சென்றார். இப்படியே அவர் ஏழாவது கட்டடத்தை கடந்து செல்லும் போது, அங்கு உட்கார்ந்து இருந்த காலணிக்கு மெருகூட்டும் நபர் தன்னை கடந்து சென்ற ஒவ்வொரு நபரையும் எண்ணிக் கொண்டு இருந்தார்: “97, 98, 99, 100 அவரை செயல் அதிகாரி கடக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். “நண்பரே, நீங்கள் மிகவும் பரபரப்பாக செல்வதைப் போலத் தெரிகிறது, எனவே உங்களுக்கு இடையூறு செய்வதற்காக என்னை மன்னிக்கவும். ஆனால், இன்று என்னுடைய பிறந்த நாள் ஆனபடியால், என்னை கடந்து செல்லும் நூறாவது நபருக்கு நான் இலவசமாக காலணிக்கு மெருகூட்ட வேண்டும் என்று ஒரு உறுதிமொழியை எனக்கு நானே எடுத்துக் கொண்டு இருக்கிறேன். அந்த நூறாவது நபர் நீங்கள்தான். என்னுடைய பிறந்தநாள் உறுதிமொழி நிறைவேற தயவுசெய்து உங்கள் காலணியை மெருகூட்ட எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.” என்று வேண்டினார். அவருடைய பேச்சை கேட்டு உ உருகிய அதிகாரி அங்கே உட்கார்ந்தார். மெருகூட்டுபவரும் கண்ணும் கருத்துமாக, புருவத்தில் இருந்து வியர்வை வடியும் அளவுக்கு கடுமையாக உழைத்து, அதிகாரியின் காலணிகளுக்கு பாலிஷ் பிர போட்டார். பாலிஷ் செய்த பிறகு, காலணிகள் புத்தம் புதியன போல மின்னின. அதிகாரி புறப்படத் தயாராகும் வேளையில் கேட்டார், “உங்களுடைய வழக்கமான கட்டணம் என்ன?” காலணிக்கு மெருகூட்டும் நபர் கூறினார், “ஐந்து டாலர்கள், ஐயா.” அதிகாரி அவருக்கு பத்து டாலர்களை கொடுத்து, “பிறந்த நாள் வாழ்த்துகள்” என்றார். அதிகாரி சென்றதும், காலணி மெருகூட்டுபவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் இவ்வாறு சொல்லத் தொடங்கினார், “97, 98, 99…” நண்பர்களே, நாம் படைப்புத்திறனுடனும் சொல்நயத்துடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த கதை சிறப்பாக எடுத்துரைக்கிறது. ஏனென்றால், பல நேரங்களில், நம்மிடம் இருப்பவை எல்லாம் அவை மட்டுமே. படைப்புத்திறனுடன் இருக்கவும்!

வாழ்க்கை நமக்கு எந்த உறுதிமொழிகளையும் கொடுப்ப சவாலாக இருக்கும் என்பதைத் தவிர. இது ஏதோ வாழ்க் கடினமானது, துணைவிதிகளைப் போலத் தோற்றம் தருகிறவ எனினும், உங்கள் நாளை எதிர்மறையான மன பதிலாக நேர்மறையான மனப்பான்மையுடன் எதிர்கொள்வி எனில், அது எல்லையற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேயூ அதிக எளிமையானதாகவும் மாறும் என்று நான் நம்பிக்கைலோ சொல்கிறேன். மனப்பான்மைக்

உங்கள் கனவை அடைவதை நோக்கி செல்கையி நீங்கள் படைப்புத்திறன் உடையவராக இருக்க வேண்டும். உங்களால் அடைய முடியும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும் “இது சாத்தியமானது” என்றும், “ஆமாம், என்னால் முடியும் “ஆமாம், என்னால் முடியும்,” “ஆமாம், என்னால் முடியும்! என்றும் நிலைமாறாமல் தொடர்ந்து ஒரே சீராக சொல்லும் ஒரு மனநிலையையும் நீங்கள் கொண்டு இருக்க வேண்டும் “என்னால் முடியும்”என்னும் ஒரு மனப்பான்மைமை நீங்கள் கொண்டு இருக்க வேண்டும். “ஆமாம்” என்னும் மனப்பான்மையை, ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் மனப்பான்மையை நீங்கள் கொண்டு இருக்க வேண்டும். சார்லஸ் ஸ்விண்டால் கூறுகிறார், “வாழ்க்கை என்பது 10 சதவீதம் எனக்கு ஏற்படும் நிகழ்வுகளாகவும், அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப நான் எப்படி பதில் வினை ஆற்றுகிறேன் என்பது மீதி 90 சதவீதமாகவும் இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.” எனவே, வாழ்க்கை உங்கள் கையில் இருக்கிறது. நமது மனப்பான்மைகளுக்கு நாமே பொறுப்பு உடையவராக இருக்கிறோம்! ஒவ்வொரு நாளையும் ஒரு மகத்தான இனிய நாளாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுக்கவும்.

You may also like

முன்னேற்றும் கதைகள்

அகமொழி

வாழ்க்கையில் சில கேள்விகள் நம்மைத் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கும். “என் மனம் இவ்வளவு குழப்பமா?”, “எதையோ தவறவிட்டு வாழ்கிறேன் போல இருக்கிறது”, “என் உறவுகள் ஏன் வெறுமையாக
முன்னேற்றும் கதைகள்

பழைய கடிகாரம்

ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பழைய கடிகாரம் இருந்தது. அந்தக் கடிகாரம் கிராமத்தின் மையத்தில் இருந்த ஒரு பெரிய கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு