தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றம் நடைபெறுகிறது