செய்திகள்

வாயை மூடு

நீங்கள் படுக்கையில் இருந்து எழ மனம் இல்லாமல் இருந்த நாட்கள் உண்டா? நீங்கள் தூக்க கலக்கத்தோடு இருந்ததால் அல்ல, ஆனால் நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது, அல்லது பிரச்சினைகளைக் கண்டு சோர்வடைந்து, போனதினால் அல்ல, ஆனால் படுக்கையில் கிடப்பதே மேல் என்பதினால் ஆமாம், அநேகமாக நாம் அனைவருமே அத்தகைய நாட்களை கடந்து வந்திருப்போம். ஆனால் அத்தகைய நாட்களை வெற்றி கொள்வதற்கு உங்கள் அக உரையாடலை, உங்கள் அக தகவல் பரிமாற்றத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அது தொடர்பால், நீங்கள் படுக்கையை விட்டு எழும்புவதற்கு எந்தவொரு அவசியமும் இல்லை என்று உங்களிடம் சொல்லும் போது, நீங்கள் உடனே “வாயை மூடு” என்று மறுமொழி அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்! அதுதான் சரி. வாயை மூடு என்று சொல்லிலிட்டு, அதன் பிறகு, எழுந்திரு, எழுந்திரு, முன்னேறிக் கொண்டு இரு,பரபரப்பாக இயங்கு என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளவும்! ஏனென்றால், அதை
மட்டுமே ஆகும்

உங்களுக்காக வேறு எவரும் செய்யப் போவதில்லை, ஆனால் நீங்கள் மட்டுமே அதை செய்தாக வேண்டும். மனச்சோர்வு என்பது வழக்கமாக, எதிர்மறையான சிந்தனை கொண்ட அக உரையாடலின் விளைவே ஆகும். படுக்கையை விட்டு எழுந்து நேர்மறையான ஏதாவது ஒன்றை (எமோஷனல் மினிட் போல) கேட்கவும் அல்லது நேர்மறையான ஏதாவது எழுத்தாக்கத்தை வாசிக்கவும், தினசரி அடிப்படையில், உங்களால் வரிசை மாறாமல் அப்படியே சொல்லக் கூடிய உறுதிமொழிகளின் பட்டியல் ஒன்றை தயாரிக்கவும்.
“இன்று ஒரு மகத்தான நாளாக அமையப் போகிறது, ஏனென்றால் இன்று அப்படித்தான் இருக்கும் என்று நான் முடிவு எடுத்துவிட்டேன். ஒரேபோல் இரண்டு இலைகள் கிடையாது, ஒன்று போலவே இருக்கும் இரண்டு உதிர்பனித்துளிகள் கிடையாது, ஒன்று போலவே இருக்கும் இரண்டு கைரேகைப் பதிவுகள் கிடையாது. நான் எதைச் செய்வதற்குப் பிறந்து இருக்கிறேனோ, அதைச் செய்வதற்கு வேறு யாரும் பிறக்கவில்லை.” விழித்து எழு, எழுந்திரு, அப்போதுதான் நீ மேலே உயர முடியும் | ஒரு மகத்தான இனிய நாளை பெற்றிருக்க முடிவெடுக்கவும்.

You may also like

செய்திகள்

ராஜ்யசபா தேர்தல் மற்றும் கூட்டணி

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய
செய்திகள்

மனிதநேயத்தின் பெருமை

குட்டி கதை: ஒரு மனிதன் கடலோரத்தில் நடந்து சென்றபோது, ஆயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கி இறந்து கொண்டிருந்தன. அவன் ஒவ்வொரு மீனையும் பொறுமையாக எடுத்து மீண்டும்