முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக: அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு ரூ.5,000 வரை வங்கி டெபாசிட்!

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக

அரசு பள்ளியில் மாணவரை சேர்த்தால் ரூ.5,000 டெபாசிட்

: ஊட்டி அருகே அரசு உயர் நிலை பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க 1ம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயி ரம் வங்கியில் டெபாசிட் செய் யும் திட்டத்தை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அறி வித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிளூர் கோக் காலாட அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலை யில் கடந்த சில ஆண்டு களுக்கு முன் மூடப்பட்டது. ஆனால், இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் கள் மற்றும் ஊர் பொதுமக்க ளின் முயற்சியால் மீண்டும் இப்பள்ளி 3 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் திறக்கப்பட் டது. தற்போது இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் படிக்கின்றனர்.

பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல

ஊட்டி அருகே ஆசிரியர்கள் நூதன திட்டம்

முயற்சிகள் எடுத்து வருகின்ற னர். இதற்காக தற்போது பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயி ரம் வரை டெபாசிட் செலுத் துவதாக உறுதியளித்து, துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.

பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும், ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட 7ம் வகுப்பிற்கு ரூ.4 ஆயிர மும், 8ம் வகுப்பிற்கு ரூ.3 ஆயிரமும், 9ம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட உள் ளது. இந்த மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்து செல் லும்போது, அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற் றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது போன்று கீளூர் பள்ளி ஆசிரியர் கள் மற்றும் மாணவர்கள் எடுத்து வரும் முயற்சிக்கு தற்போது இப்பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது பள்ளி திறக் கப்பட்ட நிலையில், மாண வர்கள் சேர்க்கையை அதிகரிக்க உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார். ரூ.5 ஆசிரியைகள் மோனிஷா மற்றும் வள்ளி ஆகியோர் உள்ளது.சாம்ராஜ், கைகாட்டி, மேலூர் போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ்நாட்டிலேயே இது போன்று மாணவர்கள் சேர்க் கையை அதிகரிக்க ஆசிரியர் கள் மற்றும் முன்னாள் மாண வர்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது இதுவே முதல் முறை என கூறப்ப டுகிறது

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

முக்கிய செய்திகள்

பாரபட்சமில்லா பக்தி திருச்சி ஐயப்பன் கோவில் மக்கள் முன்மாதிரி

திருச்சி ஐயப்பன் திருக்கோவில் துவங்கிய காலம் முதல் இன்றுவரை ஏழை பணக்காரன் உயர்பதவி வகிப்பவர் என சிறப்பு வழி படி தரிசனம் போன்ற பாரபட்சம் இல்லாமல் பல்லாயிரம்
செய்திகள் முக்கிய செய்திகள்

“ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு தடுமாறும் நிலை – அரசு இடையிலான நிதி மோதல் காரணம்”

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழகத்தில் இதற்கான மாணவர் சேர்க்கை
Translate »